கனத்தச் சிறகு

உன் நினைவென்னும் 
அடைமழையில்
நனைந்து கொண்டேயிருக்கிறேன்
கனத்துக்கிடக்கிறது 
என் சிறகு
இருந்த இடத்திலேயே
நகராமலிருக்கிறேன்
உன் அடைமழை 
எப்போது நின்று...
நான் எப்போது சென்று...
எப்போது 
என் சிறகை விரித்து...
பறந்து... மறந்து....
திரிந்து... தொலைந்து போக...

        ~ ஜெய் கபி 

Comments

Popular Posts