சாரலோடு தேநீர்
அதென்ன பெரிய
காதலியின் முத்தம்!
அடைமழையில்
ஜில்லென்ற காற்று
கன்னம் மோதும் வேளையில்
பட்டுத் தெறிக்கும் சாரல்
தொட்டுப் போவதில்
அந்த மழையோடு
உரையாடும்
மரங்களையும் வீடுகளையும்
பார்த்துக்கொண்டே சூடாக
தேநீர் அருந்தியிருக்கிறீர்களா?
~ ஜெய் கபி
Comments
Post a Comment